
தமிழகத்தைப் பார்த்து 10 மாநிலங்கள் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஆரம்பித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த, நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 2 ஆம் கட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிகழ்ச்சியில் பேசியப் போது, மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது . மேலும், கலைஞர் உரிமைத்தொகை வெற்றியின் உச்சம் என்பதை அண்டை மாநிலங்கள் உணர்ந்துள்ளன.
பின்னர், தமிழகத்தைப் பார்த்து 10 மாநிலங்கள் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஆரம்பித்துள்ளன என்று தெரிவித்தார்.




