BJP – AIADMK alliance: மீண்டும் கூட்டணி முயற்ச்சி கைகொடுக்குமா?

Advertisements

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துபேசினர். அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, தெரிவித்த நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துப் பேசியதன் காரணமாக அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியிலிருந்து கடந்தவாரம் அதிமுக வெளியேறியது இது தமிழக பாஜகவினரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தசந்திப்பின்போது  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரதராஜ் ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *