V. P. Duraisamy: அதிமுகவுடன் கூட்டணி தொடர பேச்சு வார்த்தை!

Advertisements

அதிமுகவுடன் கூட்டணி தொடர பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகப் பாஜக மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகள் எழுந்த நிலையில் கூட்டணிகுறித்த வதந்திக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், அதிமுக  கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது ஒட்டு மொத்த தொண்டர்களின் முடிவு என்றும், கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதிக்கட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நிலைக்கு வந்து இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.

கூட்டணி பிளவுகுறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவசரமாகப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசுவாரெனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பு பாஜக – அண்ணாமலை கூட்டணி முறிவுக்கு அதிருப்தி தெரிவித்தன. முதலமைச்சர் பதவி போட்டியால் அதிமுக பாஜகவிலிருந்து விலகியதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தச் சூழலில், அண்ணாமலை டெல்லி பயணம் சென்றிருந்த போதிலும் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி பொறுப்பாளர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. கேச விநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிலைபாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விபி துரைசாமி,“ பாஜக – அதிமுக கூட்டணி நீடிப்பதற்காகவே மூத்த தலைவர்கள் பேசி வருவதாகவும், இரு கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும்” என்று கூறினார். மேலும் கூட்டணிகுறித்து நல்ல முடிவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *