
புகாரை வாபஸ் பெற பெண் காவலருக்கு மிரட்டல்!
சென்னை: விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட திமுகவினர் இருவர் மீதான புகாரை வாபஸ் பெறக் கோரி பெண் காவலரை ஒரு கும்பல் காவல் நிலையத்திற்குள் புகுந்து மிரட்டியதையடுத்து, அந்தக் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் எஸ் ஏகாம்பரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 31, 2022 அன்று விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது இருவரும் கான்ஸ்டபிளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் போலீசார் தெரிவித்தனர். பெண் காவலர் போலீசில் புகார் அளித்துப் பின்னர் அதை வாபஸ் பெற்றார்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் கண்டனங்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆதரவிற்குப் பிறகு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த வியாழனன்று, ஒரு கும்பல் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, பெண் காவலரிடம், அந்த நபர் நீதிமன்றத்தில் பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகியோருக்கு எதிராகச் சாட்சியமளிக்க வேண்டாம் என்று பெண்ணிடம் கேட்டு, வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்தார். ஸ்டேஷனில் இருந்த மற்ற போலீஸ்காரர்கள் அவறுக்கு உதவி செய்ய விரைந்தனர்.
விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, பெண் கான்ஸ்டபிளிடம் புகாரை வாபஸ் பெறச் சொல்லும்படி செய்ததை நடவடிக்கை தேவையென எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக ஊடகப் பதிவில், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார். இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்தி வருவதாகப் போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

