Udayanidhi:அரசியலும்..ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது..தமிழசைக்கு உதயநிதி பதில் !

Advertisements

துணை முதலமைச்சர் உதயநிதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் (தமிழிசை சவுந்தராஜன்) அக்காவுக்குக் கோபம் வருகிறது!

அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ’கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ’சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்!

ஓடாதத் தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

ஆயிரக்கணக்கான கோவில்களுக்குத் திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!

‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்குக் கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே…!

நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.

ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *