நீட் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் பதிவு!

Advertisements
நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை நிகழ்வின்போது, நீட் தேர்வுகுறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. 4 ஆண்டுகளாகியும் நீட் தேர்வைத் திமுக அரசு ரத்து செய்யவில்லையென அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்றும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Advertisements

இந்த நிலையில், தவெக தலைவர் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.

தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.

ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *