
திருச்சியில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பொதுக்கூட்டம், புதிய தொலைநோக்குத் திட்டங்கள் ஏதுமில்லாத “தேர்தலுக்குப் பிந்தைய ஒரு சாதாரணப் பரப்புரைக் கூட்டமாகவே” அமைந்துவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதுகெலும்பாக விளங்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும் உணவு வழங்கும் உழவர் பெருமக்களின் உண்மையான எதிர்பார்ப்புகள் குறித்து முதல்வர் மேடையில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றமளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்..
வெறும் அரசியல் பேச்சுகளால் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது; தவெக அரசு உழவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..


