Thirumavalavan:ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் சதி!

Advertisements

சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் இன்று சந்தித்தார். அப்போது அவர்,

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளன் கூறுகையில்,* தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கைக் கெடுத்து பிரச்சனைகளை உருவாக்கச் சில கட்சிகள், அமைப்புகள் சதி செய்கின்றன.

* தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கச் சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.

* பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அரசியல் சதி இருப்பதாக விசிக கட்சி சந்தேகிக்கிறது.

* ஆம்ஸ்ட்ராங் பலியான சில நிமிடங்களிலேயே பாஜவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் எனப் பேட்டி தருகிறார்.

* எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் விசாரிக்கக் கூடாது எனக் கூறியது ஏன்?

* ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளார்கள் என ஒரு வருடத்திற்கு மேல் பேசப்பட்டு வருகிறது.

* ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

* ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்கப் பாஜக வலிந்து கூறுகிறது.

* கலைஞர்குறித்து கொச்சையாக விமர்சித்துச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க சதி செய்கின்றனர்.

* நீட் தேர்வு முறைகேடு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மறைக்கப் பாஜக முயற்சித்து வருகிறது.

* புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள ஆணையம் அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்குப் பாராட்டு என்று அவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *