
தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் போலீஸை, அவரது அண்ணனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகனோ, மகளோ வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவரைக் காதலித்தால், அவர் இருப்பதை விட இறப்பதே மேல் என்று பல்வேறு படங்களில் தந்தை கதாபாத்திரங்கள் வசனம் பேசுவதை கேட்டிருப்போம். அப்படியொரு சகோதரர், பெண் காவலர் என்றும் பாராமல் தனது தங்கையையே கொலை செய்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராயப்போல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி. இவர், ஹைதராபாத் அருகே உள்ள ஹையத் நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் என்பவரைக் காதலித்துள்ளார்.
மேலும், பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெடிருக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம்குறித்து பூ வியாபாரி தனம் கூறுகையில், “மல்லிப்பூ கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. மேலும், மல்லிகைப்பூ வரத்துக் குறைவால் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.
பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது, சென்ட் பூக்கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது, பன்னீர் ரோஜா கிலோ 200 ரூபாய், பட்டன் ரோஜா கிலோ 200 ரூபாய், மேலும் கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய் வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.



