Advertisements

Supreme Court Order: கழிவு நீர் அகற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு நிதியை உயர்த்தி வழங்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.20 லட்சமும், இதர பாதிப்புக்கு ரூ.10 லட்சம்வரை இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாக்கடை மற்றும் மனிதக் கழிவுகளைக் கையால் சுத்தம் செய்வதைத் தடுக்க 14 வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.
Advertisements


