
Actress Sri Reddy : தான் சொல்லாத ஒரு கருத்தை, தான் சொன்னதாகப் பலர் குறிவருவதாகவும், ஒருவேளை அவர்கள் நான் அந்த விஷயத்தைச் சொன்னதாக நிரூபித்தால் பீச்சில் நிர்வாணமாக நடக்க தயார் என்று கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
பெரியாளவில் இன்னும் எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், தனது செயல்களால் சர்ச்சைகளை ஏற்படுத்த மறக்காத ஒரு நடிகை தான் ஸ்ரீ ரெட்டி. அதிலும் குறிப்பாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய நிர்வாண போராட்டம் மிகப்பெரிய எதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகச் சர்ச்சை கருத்துக்கள் பலவற்றை வெளியிட்டு வந்தார் ஸ்ரீ ரெட்டி என்றும் கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு ஆதரவாகப் பேசிய அவர், இந்தத் தேர்தலில் அவர் தோற்றுப் போனால் விசாகப்பட்டினம் கடற்கரையில் தான் நிர்வாகமாக நடப்பேன் என்று கூறியதாகச் சில கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி இப்பொது தோல்வியடைந்ததை அடுத்து, ஸ்ரீ ரெட்டி கடற்கரையில் நிர்வாணமாக நடக்க வேண்டும் என்று பல தொடர்ச்சியாக அவரை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அவ்வாறு எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்றும், ஒருவேளை தான் அப்படி சொன்னதாக யாரேனும் நிரூபித்தால், தான் கடற்கரையில் நிர்வாணமாக நடக்க தயார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

