மின்சார ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Advertisements

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 28 மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு நாள்தோறும் அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணிவரை 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

பீக் அவர் எனப்படும் காலை, மாலை நேரங்களில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 20 முதல் 25 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரண்டு மார்க்கமாகவும் இன்று முதல் 28 மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப, ரயில்வே அட்டவணையையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் புதிய அட்டவணைக்கு ஏற்பத் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *