விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!

Advertisements

ராமநாதபுரம்:

தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும் பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, திருப்புல்லாணி, தொண்டி, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது.

இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தொடர் சாரல் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளித்துக் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டார்.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகக் கடலுக்கு மீனவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்து வருகிறது. சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, கல்லல், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காலையில் தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படும் எனப் பெற்றோர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் 9 மணிவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் மழை யில் நனைந்தபடி பள்ளி களுக்கு சென்றனர். பொது மக்கள் தொடர் மழை கார ணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

புயல் காரணமாகச் சிவகங்கை மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையிலும் மாவட்ட நிர்வா கம் குளறுபடியால் பள்ளி களுக்கு விடுமுறை அறி விப்பு வெளியிடவில்லை. அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் கொட்டும் மழையிலும் மாணவ-மாணவிகள் நனைந்தே செல்கின்றனர். தற்பொழுது பருவநிலை காரணமாகக் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவி வருகிறது. தற்பொழுது மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி களுக்கு செல்வதால் தொற்று நோய் பரவுமோ என அச்சமடைந்துள்ளனர்.

விருதுநகர், மதுரை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிதமான முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிக ரித்தது. சிவகாசியில் மழை காரணமாகப் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டது. மதுரையில் காலை 8 மணி முதல் தொடர்ந்து மழை பெய்ததால்மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *