
சென்னையில் அதிகரித்துவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
இதற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் சார்பில் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதன் காரணமாகக் கருத்து கேட்பு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
கருத்துக்கேட்பு அடிப்படையில் முதலமைச்சரின் ஒப்புதலின் படி சில மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், பிப்ரவரி மாதம் முதல் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சேவைக்காகத் தனியார் பேருந்துகளுக்குப் போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கி உள்ளது.
