
இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2023 இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து கேள்விகள் எழுப்ப உள்ளனர்.
இன்று காலை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு
இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இரு அவைகளும் கூடிய நிலையில் மாநிலங்களவை பகல் 12 மணி, மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

