
சென்னை:
இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள நட்டத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று பங்கேற்றனர்.
இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் அதன் சர்வதேச தாக்கங்கள்குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
இந்திய பண்பாட்டின் ஒரு அம்பாசிடராகச் சினிமா செயல்படுகிறது. இந்திய சினிமாவுக்கு நீண்டகால திட்டமிடல் அவசியமாகும். தற்போது உள்ள வியாபாரத்தை பாதிக்காமல் புதிய தொழில்நுட்பங்களைச் சினிமா துறையில் இணைக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கித் தப்பி ஓட முயன்ற குற்றவாளியைத் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சினிமா தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்காக ஐ.டி.ஐ.களை உருவாக்க வேண்டும்.
