
தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அவமானம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 10 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசு குறித்து பேசிய போது, தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என தெரிவித்தார்.
இதையடுத்து, இஸ்ரேல்-ஹமாஸ், இந்தியா-பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.





