neet exam 2024issue:நீட் தேர்வுக்கான கேள்விகளைப் பெற்றது உண்மை: ஒப்புக்கொண்ட மாணவன்- மார்க் என்ன தெரியுமா?

Advertisements

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தேர்வு நாளைக்கு முந்தைய தினம் வெளியான குற்றச்சாட்டிலா், நீட் தேர்வு எழுதிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். பீகார் மாநில போலீசாரின் விசாரணையில் அந்த மாணவன் தேர்வுக்கு முந்தைய நாள் வினாக்களைப் பெற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளான்.

அந்த மாணவன் இயற்பியல் பாடத்தில் 85 சதவீத (percentile) மதிப்பெண் பெற்றுள்ளார். உயிரியல் பாடத்தில் 51 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் வேதியியல் பாடத்தில் 5 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்.

விசாரணையில் கைது செய்யப்பட்டுன் அனுராக் கூறியதாவது:-

ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தேன். எனது மாமா சிகந்தர் சமாஸ்திபுருக்கு திரும்பி வரச் சொன்னார். மேலும், தேர்வைப் பார்த்துக் கொள்ளலாமென உறுதி அளித்தார். தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் சில வினாக்கள் மற்றும் அதற்கான பதில்கள் கிடைத்தன. அடுத்த நாள் தேர்வில் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டன.

வேதியியல் பாடத்தில் 5 சதவீத மதிப்பெண் எடுப்பதற்கு காரணம், முந்தைய நாள் வினாக்கள் கிடைத்ததால், மனப்பாடம் செய்யும் அளவிற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனுராக் ஓபிசி இடஒதுக்கீட்டில் 4,67,824 இடத்தைப் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 10,51,525 இடத்தைப் பிடித்துள்ளார்.

இன்னும் 3 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பேரும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களில் ஒருவர் 720-க்கும் 300 மதிப்பெண் பெற்றுள்ளார். உயிரியல் பாடத்தில் 87.8 சதவீதம் எடுத்துள்ளார். ஆனால் இயற்பியல் பாடத்தில் 15.5 சதவீதம், வேதியியல் பாடத்தில் 15.3 சதவீதம் எடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *