
ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன.
இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் படத்தின் 4-வது பாடலான புள்ள பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
இப்பாடலின் வரிகளைத் தனுஷ் எழுதியுள்ளார் ஜி.வி பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.
