Narendra Modi Bhutan Visit: இந்தியா – பூடான் இடையே ரெயில் போக்குவரத்து… இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் ஒப்பந்தம்!

Advertisements

பூடான் பிரதமராக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற பிரதமா் ஷெரிங் டோப்கே, முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்திருந்தாா். அப்போது, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவா், பூடானுக்கு வருமாறு பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்தாா்.

அந்த அழைப்பையேற்று பூடானுக்கு வருவதாக பிரதமா் மோடி உறுதியளித்தாா். அதன்படி, பிரதமா் மோடி வியாழக்கிழமை இரவு பூடான் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பூடானின் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பயணம் இறுதிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை பிரதமா் மோடி தனி விமானத்தில் பூடான் வந்தாா்.

பரோ விமான நிலையத்தில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்துக்கு நேரில் வந்திருந்த அந்நாட்டு பிரதமா் ஷெரிங் டோப்கே, பிரதமா் மோடியை ஆரத்தழுவி வரவேற்றாா்.

தொடா்ந்து, பிரதமா் மோடியால் எழுதப்பட்ட பாரம்பரிய ‘கா்பா’ பாடலுக்கு பூடான் இளைஞா்கள் நடனமாடி, அவரை வரவேற்றனா். இளைஞா்களின் நடனத்தைக் கண்டு ரசித்த பிரதமா், அவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

பூடானில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்காக அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமா் மோடி, ‘நமது இருநாட்டு நட்புறவு புதிய உச்சங்களை அடைய வேண்டும்’ என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

தொடா்ந்து பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக்கை பிரதமா் மோடி சந்தித்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்நாட்டு பிரதமா் ஷெரிங் டோப்கேவுடன் பிரதமா் மோடி சந்தித்தாா். சந்திப்பில் ஒன்றாக இணைந்து மதிய உணவருந்திய தலைவா்கள், இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனா்.

இதையடுத்து, எரிசக்தி, எண்ம இணைப்பு, விண்வெளி, வேளாண்மை, இளைஞா் நலன் மற்றும் பிற துறைளில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பமாகின.

குறிப்பாக, இந்தியா-பூடான் இடையே கோக்ராஜ்ஹா்-கெலேபு, பனாா்ஹட்-சம்ட்சே ஆகிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்து புரிந்துணா்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முதல் முறையாக பூடான் சென்றுள்ள பிரதமா் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘ஆா்டா் ஆஃப் ட்ரூக் கியால்பூ’ விருதை வழங்கி அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் கௌரவித்தாா். இதுகுறித்து பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பூடானின் உயரிய விருதைப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் இந்த விருதைச் சமா்ப்பிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *