
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் இளையராஜா தலைமையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா கூறியது,
* நாம் தமிழர் கட்சியில் ஏறக்குறைய 7 ஆண்டு காலமாக அரூர் தொகுதி தலைவராகப் பணியாற்றி உள்ளேன்.
* 7 ஆண்டு காலமாகப் பயணித்த இந்தக் காலகட்டங்களில் பல்வேறு விருப்பு, வெறுப்புகளுக்கு இணங்கக் கனத்த இதயத்துடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன்.
* தருமபுரியில் கூண்டோடு நாம் தமிழர் கட்சி கலைப்பு என்கிற தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்குக் கூண்டே கிடையாது. இப்பொழுது இருக்கிற உறவுகள் மட்டும் தான் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்காகக் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி உள்ளனர்.
* கட்சியிலிருந்து விலகக் காரணம்… சீமானின் கொள்கை, கோட்பாடுகளை விரும்பி இணைந்தோம். அந்தக் கொள்கை கோட்பாடுகளிலிருந்து விலகி இருக்கின்ற, ஆளுகின்ற, ஆளப்போகிற, ஆண்ட தலைவர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசுவதும், சாதிகளைத் தரம்தாழ்ந்து பேசுவதும், எங்களுடைய வரலாற்று மாற்றத்திற்கான அதற்கான சிக்கல்களை ஏற்படுத்தும் விதமாகப் பேசுவதும், அதே சமயம் நாங்கள் கஷ்டப்பட்டு கட்சியைக் கட்டமைக்கும்போது, தமிழ் தேசியம் என்ற அளவில் நீங்கள் பேசுவது கட்டமைப்பைச் சிதைக்கிறது என்பதால் நாங்கள் இதில் பயணிப்பது பயன்பாடு இல்லை என்பதால் கட்சியிலிருந்து விலகுகிறோம்.
* கட்சியிலிருந்து விலகுகிறோம். மேற்கொண்டு பொறுப்பாளர்களிடம் பேசி என்ன முடிவு என்பதை தெரிவிக்கிறோம்.
* நாங்க நடிக்க வைக்கிற இயக்குனர் கிட்ட இருந்து வருகிறோம். அதனால நடிகரைப் பார்த்துக் கட்சியைப் பார்த்து விலக வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் விஜய் எங்களோட ஜூனியர் தான். நாங்கள் தான் சீனியர் என்றார்.


