தியோரி மா கோவிலில் சாமி தரிசனம் செய்த எம்.எஸ்.டோனி!

Advertisements

ராஞ்சி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.டோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியைத் துவங்கியுள்ளார்

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராகத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தது.

இதன்மூலம் எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி பேட்டிங் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தியோரி மாக்கோயிலுக்கு எம்.எஸ்.டோனி சென்றார். அங்குச் சாமி தரிசனம் செய்தார்.

இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *