தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன பயம்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்காதது குறித்தும், மேகதாட்டில் அணைக் கட்டும் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?, தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?, தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.


