செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் ஆய்வு!

Advertisements

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்தது. இதனால் ஏரியிலிருந்து கடந்த 13-ந்தேதி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏரியிலிருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.5 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2860 மில்லின் கனஅடியாகவும், நீர்வரத்து 1700 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 3000 கனஅடியாகவும் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *