Medical Counselling: மாணவர்களே உஷார் .! கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்,!

Advertisements

Medical Counselling: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

Medical Counselling: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று மாலை 5 மணிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கலந்தாய்வு – விண்ணபிக்க இன்றே கடைசி நாள்:
மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டு இருந்த இதுதொடர்பான அறிவிப்பில், “விண்ணப்பதாரர்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டதால், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான செயல்முறையை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 09.08.2024 மாலை 5.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணிவரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி? மாணவர்களே… இன்று முதல் ஆக.8 வரை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்- எப்படி?

கலந்தாய்வு எப்போது?
மருத்துவ கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அளவில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, முதல் சுற்றுக் கலந்தாய்வு ஆக.14 முதல் 20ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் மாநில அளவிலான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு முடிந்ததும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீடு கலந்தாய்வு எப்போது?
அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு மாணவர்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு, ஆகஸ்ட் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை. 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான இடங்கள்:
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்கள், ஒரு இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்கள், மூன்று மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் 450 இடங்கள் என மொத்தம் தமிழ்நாட்டின் 9050 மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல் பிடிஎஸ் பல் மருத்துவப் படிப்பில் மூன்று அரசுப் பல் மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ்படிப்பில் 851 இடங்களும் பிடிஎஸ் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *