
சென்னை: தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, வெங்கடேஷ் பண்ணையாரின் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் முகமது சமீர். இவர் லீடர் கேப்பிட்டல் சர்வீஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி அதில், நிர்வாக இயக்குநராக இருந்தார். இவரது நிறுவனத்தில் ஜெய்கணேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் முதலீடு செய்தார். பின்னர், முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. எனவே, முதலீடு பணத்தை இப்போது திருப்பித்தர இயலாது என முகமது சமீர் தெரிவித்துள்ளார்.



