Lok Sabha Election 2024: வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு..வாக்குப்பதிவு தாமதம்!

Advertisements

கோவை: கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கைச் செலுத்தி சென்றனர்.

ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதாகவும் தொடங்கி நடந்தது.

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் 184-வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு எந்திரத்தில் இன்று காலைத் திடீரெனக் கோளாறு ஏற்பட்டது.

இங்குக் காலையிலேயே வாக்காளர்கள் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் எந்திரம் பழுது காரணமாக அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அரைமணி நேரத்திற்கு பிறகு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு வாக்காளர்கள் வாக்களித்துச் சென்றனர்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி 181-வது வாக்குச்சாவடியிலும் எந்திரம் பழுதானது.

இதனால் அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு தற்போது வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இதேபோல் போத்தனூர் 59-வது வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது காரணமாக அரைமணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. இதுமட்டுமின்றி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டன. அதனை ஊழியர்கள் உடனுக்குடன் சரி செய்து, வாக்குப்பதிவை நடத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *