Lok Sabha Election 2024: பலாப்பழத்தை தேடிதான் ஈக்கள் வரும்.. ஓ.பி.எஸ்.க்கு செல்லூர் ராஜூ பதிலடி!

Advertisements

பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானல் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வரமாட்டானென மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

(தேர்தலுக்குப் பின்னர் அதிமுக தங்களிடம் வந்து விடும் என ஓ.பி.எஸ். தெரிவித்தற்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடிகொடுத்துள்ளார்.மேலும் பேசிய அவர் அது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்றும் கூறினார்.

(பாஜக 400 சீட் வெல்லுமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்)

தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள், தமிழர்களின் உரிமை மீட்பதும் பலத்தை காப்பாற்றுவதும் அதிமுகவின் கொள்கை.இந்தியா கூட்டணியில் கூட யார் பிரதம வேட்பாளர் எனக் கூறவில்லை.பாஜக கூட்டணியில் தான் மோடி பிரதமர் வேட்பாளர் எனக் கூறுகிறார்கள்

பாஜகவிற்கு மேலாக ஒரு தலைமை உள்ளது, அவர்கள் மோடி பிரதமரா என இன்னும் கூறவில்லை.
பாஜக விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் பிரதமராகப் பதவி வைக்க முடியாது எனக் கூறுவார்கள்.

தேர்தலுக்குப் பின்னரே யார் பிரதமர் எனத் தெரியவரும், மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் முடிவுச் செய்பவர்கள் தான் பிரதமராக வர முடியும்.தமிழகத்திற்கு யார் நன்மை செய்வார்கள் எனப் பார்த்து அவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு தருவோம்.

தமிழ்நாடு என்பது திராவிட பூமி ஆகவே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *