கேரள முதலமைச்சர் சதீசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!

Advertisements

கேரளாவின் புதிய முதலமைச்சராக  பதவியேற்றுள்ள சதீசனுக்கு, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவின் புதிய முதலமைச்சராக சதீசன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சதீசனுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் சார்பில் இன்று கேரளத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சதீசனுக்கு, எனது சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *