
இணையதளம் மூலம் இலவச பேருந்து பயணச்சீட்டு பெறும் வசதியைப் போக்குவரத்து துறை அமைச்சா் சா. சி. சிவசங்கர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்மூலம், இலவச பேருந்து பயணச்சீட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயணச் சீட்டுகள் தற்போது இணையதளம் மூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளைப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.
பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக் குழு மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை யுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞா்கள் மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் இனி இணையதளம் மூலம் கட்டணமில்லா பயண அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கா் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இனி, இலவச பயணச்சீட்டு பெற்றுக்கொள்ள விரும்பும் தகுதியுடையவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
பின்னா், அதற்கான குறுஞ்செய்தி பயனாளியின் கைப்பேசிக்கு வந்த பின்னா் பயணச்சீட்டு அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


