
இந்தியாவிற்கும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இந்த, தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப்பின் நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.



