Idukki: மலைபாதைளை தழுவியிருக்கும்  அழகிய மலை தோட்டங்கள்!

Advertisements

மலைபாதைளை தழுவியிருக்கும்  அழகிய மலை தோட்டங்கள்! இடுக்கி

குமுளி இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள ஊராகும். இந்த ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தேக்கடி வனவிலங்கு உய்வகம் அமைந்துள்ளது. மேலும் ஆனவிலாசம், சக்குப்பள்ளம், அனக்கர, புட்டடி, கொச்சற போன்றவை குமுளி அருகே உள்ள அழகிய சிற்றூர்களாகும்.

அண்மையில் மங்களாதேவி கோவில் அமைந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை 220 (கோட்டயம் – குமுளி:கே.கே சாலை எனப்படுவது) இதன் வழியே செல்கிறது. சுற்றுப்புறங்களிலிருந்து ஏலக்காய்,மிளகு போன்றவையின் வணிக மையமாகவும் திகழ்கிறது. தமிழகத்திலிருந்து சபரிமலை செல்வோர் பயணிக்கும் முக்கியப் பாதையில் இந்நகர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் தேனி மாவட்டத்தின்கூடலூர் நகராட்சி உள்ளது.

குமுளியிலிருந்து மேற்கே கோட்டயதிற்கும், கிழக்கே தேனி வழியாக மதுரைக்கும் செல்ல நல்ல சாலை வசதிகள் உள்ளன. காந்தளூர், மூணார் வழியாக உடுமலைப்பேட்டை செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லை. மேலும், இவ்வழியில் காட்டு விலங்குகளும் ஏராளமாக உலவும்.

குமளி கேரளா:

குமளி கேரளாவில் தேக்கடி மற்றும் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ள ஒரு அழகான நகரம். முண்டகாயம் மற்றும் காஞ்சிரப்பள்ளி வழியாக கோட்டயத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 183 இல் அமைந்துள்ள இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இந்த இடம் கேரளாவிற்குச் செல்லும் பல வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எளிதான அணுகலை வழங்குகிறது. பெரியாறு மற்றும் குமிளி ஆகிய இரண்டு வருவாய் கிராமங்களும் குமளி பஞ்சாயத்து ஆகும், இது கேரளா மற்றும் தமிழ்நாடு இடையே சந்திப்பில் அமைந்துள்ளது.


வரலாறு:

முன்பு குமளி குழுமூர் என்று அழைக்கப்பட்டது, இது தெக்கும்கூர் மன்னர்களின் தலைநகராக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரின் மார்த்தாண்ட வர்மா தெக்கும்கூர் ராஜாக்களை தோற்கடித்தார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, திருவாங்கூர் கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சியை உருவாக்கியது, சிறிது காலத்திற்குப் பிறகு, மீண்டும், சென்னை மாநிலத்தின் மலபார் மாவட்டத்துடன் இணைந்து கேரளாவை உருவாக்கியது.

ஆங்கிலேயர்கள் நகரத்திற்கு வந்தபோது அவர்கள் சாகுபடி மற்றும் வேலை நிலைமைகளின் அடிப்படையில் தீவிர மாற்றங்களைச் செய்தனர். தேயிலை, காபி, இஞ்சி, ஏலக்காய் மற்றும் பிற மசாலாப் பொருட்களின் தோட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் காடுகளை அவர்கள் உருவாக்கினர். இதனால் கேரளாவில் வேலைக்கு ஆட்கள் வாங்கப்பட்டனர்.


1920 களில் ஏராளமான மலையாளிகள் இந்த இடத்திற்கு வந்தபோது வெவ்வேறு கதைகள் உருவாக்கப்பட்டன. அவர்களின் கூற்றுப்படி, 19 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆடு மேய்ப்பவரான அங்கூர் ராவ்தர் என்பவரிடம் மலையாளிகளில் குடியேறிய ஒருவர் நிலம் வாங்கினார். ராவ்தர் திருவிதாங்கூர் ராஜாவுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் குறிப்பிட்ட கிராமப்புறப் பகுதியில் வேட்டையாடும்போது வழி தவறியபோது காட்டில் இருந்து வெளியேற உதவுவதாகக் கருதப்படுகிறது. இதற்குப் பரிசாக அரசர் ஏக்கர் நிலத்தை அவருக்குக் கொடுத்தார்.

தேக்கடி என்கிற வார்த்த்தையின் ஒலி யானைகள், முடிவுறா மலைகளின் தொடர்கள் மற்றும் நறுமணப்பொருட்களின் தோட்டங்களை நோக்கி உந்துகிறது. இந்தியாவின் முக்கிய வனவிலங்கு சரணலாயங்களில் தேக்கடியின் பெரியார் காடுகளும் ஒன்றும். நடைபயணங்கள் மற்றும் மலைபாதைளை தழுவியிருக்கிற அழகிய தோட்டங்கள் மற்றும் மலை நகரங்கள் மாவட்டம் முழுவதும் பரந்திருக்கிறது.

பெரியார் புலிகள் காப்பகம்:


தாவரம்: 171 புல்லினங்களையும் 143 ஒண்செடிகளையும் உள்ளடக்கி 1965 க்கும் மேற்பட்ட ஒண்தாவரங்கள் இங்கே உள்ளன. போடோகார்பஸ் வாலிசியானஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படுகிற ஒரே தென்னிந்திய ஊசியிலை மரங்கள் பெரியார் புலிகள் காப்பகத்தில் தான் வளர்க்கப்படுகின்றன.

விலங்குகள்:

பாலூட்டிகள்: ஆசிய யானை, வங்கப் புலி, இந்திய காட்டெறுமை, சாம்பார் மான், இந்திய காட்டு நாய், சிறுத்தை, குரைக்கும் மான், மற்றும் நீர்க்கீரி உள்ளடங்கிய விலங்குகளை பெரியார் ஏரியில் பயணம் செய்யும் போது பார்க்கலாம். நீலகிரி வரையாடு பாறைப்பகுதிகளில் காணப்படும் அதே சமயம் அழிந்து வரும் சிங்கவால் குரங்குகள் பசுமையான காடுகளில் காணலாம். பொன்னிறக் குரங்கு மற்றும் நீலகிரி லங்கூர் குரங்குகள் படகுதுறைகளுக்கு அருகில் இரைதேடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.


பறவைகள்: புலம் பெயரும் பறவைகளை உள்ளிட்டு 265 வகை பறவைகள் உள்ளன. மலபார் சாம்பல் இருவாயன், இந்திய கருப்பு வெள்ளை இருவாயன், வெள்ளை வயிற்று வால் காக்கை, பலவகை கரிச்சான்கள், மரங்கொத்திகள், ஈப்பிடிப்பான்கள், சிலம்பன்கள், கண்கவர் தீக்காக்கைள் முதலியன படகுத் துறைக்கு அருகில் காணலாம்.

ஊர்வன: நாகப்பாம்பு, விரியன் பாம்புகள், கட்டுவிரியன், பல எண்ணிக்கையிலான விஷமற்ற பாம்புகள், உடும்பு.

நீர்நில வாழ்வன: வண்ணமயமான மலபார் பறக்கும் தவளைகள் போன்ற தவளைகள், பூஞ்சைத் தவளை, இரு நிறத் தவளைகள்,  பலவகை தேரை இனங்கள், மற்றும் சிசீலியன்கள்.


மீன்கள்:  பெரியார் ஏரி மற்றும் நீரோடைகளில் பூமீன் கெண்டை என்னும் அருகி வரும் இந்திய விளையாட்டு மீன் உள்ளிட்ட மீன் இனங்கள் உள்ளன.

படகிலிருந்து நீர்க்கீரியை அடிக்கடி பார்க்கலாம்.

தோட்டங்கள்:  தேயிலை, ஏலக்காய், மிளகு மற்றும் காபி தோட்டங்கள் புலிகள் காப்பகத்தினை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளன.

இடுக்கி அணையின் வரலாறு:

1900, ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் அது. இடுக்கி மாவட்டம் செருதொனி என்கிற மலைக்கிராமத்தில் பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். இந்த மக்கள் தினமும் தாங்கள் வசிக்கும் குறவன் மலையிலிருந்து, எதிர்புறமுள்ள குறத்தி மலைக்கு சென்று தேன், மூலிகைகளை சேகரித்து வருவது வழக்கம். குறத்தி மலைக்கு செல்ல ஒரு பெரிய நதியை கடந்து செல்ல வேண்டும். கேரளாவிலேயே இரண்டாவது பெரிய நதி அது.

இதற்கிடையே, சில பழங்குடிகள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வழிகாட்டிகளாக இருந்து வந்தனர். அவர்களில் கொலும்பன் என்ற பழங்குடி, ஆங்கிலேய அதிகாரிகளுக்கு நன்கு பரிட்சயமானவர். ஜான் என்ற ஆங்கிலேயருக்கு வெகுநாளாக வழிகாட்டியாக இருந்து வந்தார் கொலும்பன்.


ஒரு தென்மேற்குப் பருவமழைக் காலம் அது. வழக்கம்போல் குறத்தி மலைக்கு வன மகசூல் சேகரிக்க சென்ற கொலும்பன், அன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கால் குறத்தி மலையில் சிக்கிக்கொண்டார். மூன்று நாட்களாகியும் கொலும்பனால் நதியை கடக்க முடியவில்லை. தனது கணவர் என்ன ஆனாரோ, எங்கு இருக்கிறாரோ என தவித்த வந்த கொலும்பனின் மனைவி, ஆங்கிலேயர் ஜானிடம் தனது கணவர் காணாமல் போனது குறித்து தகவல் கூறினார்.

உடனே ஜான் சில பழங்குடிகளை அழைத்துக் கொண்டு கொலும்பனை தேடச் சென்றார். அங்கே வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைப்பகுதியில் தவித்துக் கொண்டிருந்த கொலும்பனை மீட்டு அழைத்து வந்த ஜான், ‘என்ன நடந்தது’ எனக் கேட்டுள்ளார். நடந்ததை சொன்ன கொலும்பன், ‘குறவன், குறத்தி மலைகளுக்கு இடையே ஒரு பாலத்தை கட்டினால் வெள்ளப்பெருக்கில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். பாலம் கட்ட முடியுமா?’ என கேட்டு இருக்கிறார்.

உடனே ஜான், பொறியாளரான தனது சகோதரர் மார்க்கை குறத்தி மலைக்கு அழைத்துச் சென்று, ‘இந்த இடத்தில் பாலம் கட்ட முடியுமா’ என ஆய்வு செய்து கூறுமாறு கேட்டுள்ளார். இரண்டு மலைகளுக்கு இடையே ஓடும் அந்த பெரிய நதியையும் காண்பித்துள்ளார்.

இதைப் பார்த்த மார்க், புதிதாக ஒரு யோசனையை ஜானிடம் சொன்னார். ‘இரண்டு மலைகளுக்கு இடையே பாலம் கட்டுவதற்கு பதிலாக, இரண்டு மலைகளையும் இணைத்து அணை கட்டினால், மலையிலிருந்து பாய்ந்துவரும் ஆற்றுநீரை தடுத்து நிறுத்தி தண்ணீரை சேமிக்கலாம்; மின் உற்பத்தியும் செய்ய முடியும்’ என கூறியுள்ளார்.

1937-இல் குறத்தி மலையில் அணை கட்டும் சாத்தியம் பற்றி திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் ஜான் தெரிவித்தார். அணை கட்டுவது குறித்த வரைபடம் மற்றும் திட்ட அறிக்கையை தயார் செய்து சமஸ்தானத்திடம் சமர்ப்பித்தார் மார்க். ஆனால் அணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டது சமஸ்தானம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, குறவன் – குறத்தி மலைகளுக்கிடையே அணை கட்டுவது பற்றிய பேச்சு மீண்டும் எழுந்தது. 1963-இல் அணை கட்டும் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டின. அதனையடுத்து, 107.5 கோடி ரூபாய் செலவில், 1969-ஆம் ஆண்டு அணைக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 1973-ஆம் ஆண்டு இடுக்கி அணை கட்டி முடிக்கப்பட்டது. குறவன்-குறத்தி மலைகளை இணைப்பதற்காக வில் போன்ற வளைவு வடிவில் தடுப்பு கட்டப்பட்டுள்ளது. மார்க் சமர்ப்பித்த வரைபடம் மற்றும் திட்ட அறிக்கையின்படியே இந்த அணை பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.


அணையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இடுக்கி அணை உருவாகக் காரணமாக இருந்த கொலும்பனுக்கு அணை அருகிலேயே சிமெண்டால் ஆன சிலையை அமைத்தது கேரள அரசு. தற்போது சிமெண்ட் சிலையை அகற்றிவிட்டு ரூ.70 லட்சத்தில், கொலும்பனுக்கு வெண்கல சிலை நிறுவியுள்ளது.

1,200 அடி நீளம், 555 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை, ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணை ஆகும். இந்த அணையில் இருந்து தினசரி 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவின் 50 சதவீத மின் உற்பத்தியை இடுக்கி அணையே பூர்த்தி செய்கிறது. இதனால், அணை எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும்.

பாதுகாப்பு கருதி, இடுக்கி அணையை சுற்றிப் பார்க்க நீண்ட காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீப காலத்தில்தான் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களிலும் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகி்ன்றனர்.  காலை 9:30 முதல் மாலை 5 மணி வரை அணையை காணலாம். பேட்டரி கார் வசதியும் உண்டு.


இடுக்கி அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் தீவிர சோதனைக்கு பிறகே அணையை பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டிருக்கும். சுற்றிப் பார்க்க வருவோர் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். செல்போன், கேமராவுக்கு அனுமதி இல்லை.

இடுக்கி அணையின் பிரமாண்டமான தோற்றமும், அபாரமான கட்டமைப்பும் மலைப்பை ஏற்படுத்தும். அணை தவிர, இடுக்கி மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. தேக்கடி, மூணாறு, கல்வாரி மலை, ஹில் வியூ பார்க், குறிஞ்சிமலா சரணாலயம், நெடுங்கண்டம் மலை, பைனாவு, ராமக்கல்மேடு, மீசபுலிமலா, ஆனையிறங்கல் அணை, சேயப்பர நீர்வீழ்ச்சி, பஞ்சலிமேடு, சதுரங்கபர வியூ பாயிண்ட், இடுக்கி வன உயிர் சரணாலயம், கல்யாணதன்டு மலை, திரிசங்கு மலை ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் என்பதால் மொழி பிரச்சனையில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *