சிலை கடத்தல்: மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்!

Advertisements

புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்குகளின் கோப்புகள் மாயமானது குறித்து விசாரணை நடத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியை ஒரு வாரத்துக்குள் நியமித்து வரும் ஏப்ரல் முதல் வாரத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட துறைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *