பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் கில்லஸ்பி!

Advertisements

லாகூர்:

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த சில முடிவுகள் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது பாகிஸ்தான் ஒயிட்பால் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒயிட்பால் தொடர் முடிந்ததும் வரும் 26-ம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜேசன் கில்லஸ்பி ராஜினாமா செய்துள்ளார்.

இந்த வருடம் தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கில்லெஸ்பியை 2 ஆண்டுக்கு டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமித்தது.

இவரது பயிற்சி காலத்தில் வங்கதேசத்திற்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராகத் தொடரைக் கைப்பற்றியது.

புதிய தலைமை பயிற்சியாளராக அக்யூப் ஜாவித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் சில மாதங்களுக்கு முன் விலகியது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *