
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலளாரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு முந்தரசன் வலியுறுத்தியுள்ளார். தைபோல அதிமுக பொதுச்செயலளாரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுநர் மாளிகை மீது நடத்தபட்ட தாக்குதலை குறிப்பிட்டு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.



