
கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யபட்டு ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் சாலை காமட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (27). இவர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி இரவு ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தலையைச் சப்தகன்னியம்மன் கோயில் வாசலிலும், உடலை அப்பகுதியில் உள்ள தண்டவாளத்திலும் வீசிச் சென்றனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி சதீஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ் குமார் நேற்று வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரின் நண்பன் சபில் என்பவர் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சதீஷ் குமார் தனது நண்பர்கள் சிலருடன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
உடலில் வெட்டு விழ்ந்த நிலையில் சுதாரித்து கொண்டு சதீஷ் குமார் அலறியபடி ஓடிய போதும் அவரை விடாமல் ஓட ஒட விரட்டிச் சரமாரியாக வெட்டியுள்ளனர். நீண்ட நேரம் சதீஷ் குமார் வராததால் அவரைத் தேடி சென்ற நண்பர்கள் சதீஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை பார்த்துக் கதறியுள்ளனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தக் கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

