
சென்னை: பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்கக் கோரி, தலைமைச் செயலகத்தை நோக்கி, மாதர் சங்கத்தினர் சென்னையில் பேரணி நடத்தினர்.
தமிழகத்தில் தொடரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி, சென்னை புதுப்பேட்டை எல்.ஜி.சாலையில் நேற்று நடைபெற்றது. பேரணிக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ராதிகா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் நாகைமாலி முன்னிலை வகித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.



