தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கத் தீவிரம் – முதலமைச்சர் விஜய் உத்தரவு.!

Advertisements
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்  தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல்  போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *