Advertisements

சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது,
- காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.
- காலநிலை மாற்றத்தைக் கல்வித்துறை மூலம் புகட்டத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- இந்தியாவிலேயே முதல் முறையாகக் கால நிலை மாற்றம்குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான்.
- காலநிலை மாற்றம்குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
- தற்போது வரை தமிழ்நாட்டில் இரு முறை காலநிலை உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன.
- தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.
- இயற்கை வளங்களைப் பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும்.
- காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.
- வயநாடு மற்றும் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை மறந்திருக்க முடியாது.
- வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளோம்.
- வெப்ப அலை தாக்கத்தின்போது மாநில பேரிடர் மேலாண்மை நிதியைப் பயன்படுத்த நடவடிக்கை.
- நீர்நிலைகள் மறுசீரமைப்பு, பல்லுயிர் பெருக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Advertisements
