chennai: பா.ஜ.க. தலைவர் கபிலன் கைது!

Advertisements

கொளத்தூர்:சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பு பகுதியில் கடந்த 1-ந்தேதி பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த வடசென்னை மேற்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வட சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கபிலன் பேசுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் புகார் அளித்தனர். இதையடுத்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை பெரவள்ளூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கபிலன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் இன்று காலை பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *