சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!

Advertisements
Advertisements

பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவராகப் பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர்மீது 15 வயது மதிக்கத் தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் தனது மகளின் செல்போனுக்கு பா.ஜ.க. பிரமுகர் எம்.எஸ்.ஷா தொடர்ந்து ஆபாசமான உரையாடல்களை அனுப்பி வந்துள்ளதாகவும், இதுபற்றித் தனது மகளிடம் கேட்டபோது எம்.எஸ்.ஷா அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிய வந்தது.

மேலும், புகார் கொடுத்தவரின் மனைவி பா.ஜ.க. பிரமுகர் இருக்கும் இடத்திற்கு மகளைத் தனியாக அழைத்துச் சென்று தங்க வைத்ததாகவும், வாட்ஸ்அப் மூலம் அவர் கூப்பிடும் இடத்திற்கு சென்று அவருடன் தங்கி னால் ஸ்கூட்டர், புதிய ஆடைகள் வாங்கித் தருகிறேன், கடனை அடைக்கி றேன் என ஆசை வார்த்தை களை கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்பு றுத்தல் அளித்துள்ளார்.

இதற்குத் தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளாரெனப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா இன்று மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *