
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், எல்.கே. அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “திரு எல்.கே. அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவருடன் பேசி, அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறித்து வாழ்த்து தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
“நமது காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணிபுரிவதில் இருந்து நமது நாட்டின் துணைப் பிரதமர் வரை பல மட்டங்களில் தேசத்திற்கு சேவை செய்த வாழ்க்கை அவருடையது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
“அவர் தன்னை நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமாகவும், செழுமையான நுண்ணறிவுகள் நிறைந்ததாகவும் இருந்தன” என்று பிரதமர் எழுதினார். பாஜக பிரமுகருடன் இருக்கும் இரண்டு படங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.


