Annamalai:ஒரு வழியாகச் சிகினல் கிடைத்தது.. விரைவில் லண்டன் புறப்படுகிறார் அண்ணாமலை!

Advertisements

சென்னை:தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் செல்ல இருக்கிறார். இதனால் அவர் அதற் கான பணிகளையும் கவ னித்து வருகிறார். லண்டனில் 3 மாதம் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிக்க உள்ளார்.

இந்த நிலையில், அண்ணாமலை லண்டன் சென்றால், தமிழக பா.ஜ.க.வில் மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி பா.ஜ.க.வினர் இடையே நிலவுகிறது.

இதுதொடர்பாக டெல்லி தலைமையும் ஆலோசனை மேற்கொண்டது. இதுகுறித்து பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந் தேதி லண்டன் செல்ல உள்ளார். ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்தில் செப்டம்பர் 2-ந்தேதி முதல் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பைத் தொடங்க உள்ளார். 3 மாத காலம் லண்டனில் தங்கி இருக்கும் அவர், அங்கிருந் தபடியே, கட்சி விவகாரங்களைக் கவனித்துக் கொள்வார்.

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிப்பார். தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புகிறது. கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம்போலக் கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார்.

அடுத்த 3 மாதங்களில், தேவைப் பட்டால் பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் காணொலியில் அண்ணா மலையுடன் கலந்து ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *