கனடாவின் புதிய பிரதமராகிறாரா தமிழர் அனிதா ஆனந்த்!

Advertisements

ஒட்டாவா:

காலிஸ்தான் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டிருந்த நிலையில், தனது பதவியை விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதனையடுத்து கனடாவின் புதிய பிரதமராகத் தமிழரான அனிதா ஆனந்த் வெற்றிப்பெற வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ எப்போது காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கினாரோ அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையில் முட்டல் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் சொந்த கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

அனிதா ஆனந்தின் முக்கிய முயற்சிகள்:

கோவிட் தவிர, வேறுசில நடவடிக்கைகளும் அனிதாவின் பெயரைப் பிரலமாக்கியது. குறிப்பாகப் பாதுகாப்பு துறை அமைச்சாராக அவர் இருந்தபோது, கனடா ராணுவத்தில் பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த அதிரடியான நடவடிக்கையை எடுத்திருந்தார். ராணுவம், போலீஸ் மற்றும் இதர சீருடை பணிகளில் பதிவாகும் பாலியல் வழக்குகளை உடனடியாக விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அனிதா முயற்சி எடுத்திருந்தார். அதேபோல, கருவூலத் துறையில் பணியமர்த்தப்பட்டபோது, நிதி விவகாரங்களில் வெளிப்படை தன்மைக்காகச் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

பாரிஸ் மாநாட்டின் தீர்மானத்தை அமல்படுத்திய அனிதா:

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பமயமாதல் பிரச்சனையைச் சமாளிக்க, வளர்ந்த நாடுகள் பசுமை எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்று பாரிஸ் மாநட்டில் தீர்மானம் போடப்பட்டது. இதில் கனடாவுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கையெழுத்திட்டிருந்தன.

ஆனால் அமெரிக்கா இதனைப் பின்பற்றவில்லை. ஆனால் கனடா இதைச் செய்து காட்டியது. இதற்குப் பின்னால் இருந்தவர் அனிதாதான்.

அதாவது இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, கனடா முழுவதும் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு சிறப்பாக வகுத்திருந்தார்.

இதன் மூலம் கனடாவில் பசுமை எரிசக்தி பயன்பாடு அதிகரித்தது. ஆக இந்தச் செல்வாக்கு எல்லாம் அனிதாவுக்கு பிரதமர் பதவி கிடைக்க வழி வகுக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 1960களில் தமிழ்நாட்டிலிருந்து சரோஜ் டி ராம் மற்றும் எஸ்.வி. ஆனந்த் ஆகியோர் கனடாவுக்கு புலம் பெயர்ந்திருந்தனர். இவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவர்தான் அனிதா ஆனந்த்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *