Over Hype கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

Advertisements

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்குப் புயலாக மாறியுள்ளது.

3 நாட்களாகக் கணிப்புகளைப் பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒரு வழியாக வங்கக்கடலில் உருவானது.

ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளைப் பிற்பகலில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், சென்னையிலிருந்து காரைக்கால் வரை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், நாளை மதியம் அல்லது இரவுவரை தொடர்ச்சியான அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *