ராணுவ ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழப்பு!

Advertisements

ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதிய  விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்துக்குச் சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாகத் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை இரவு வாஷிங்டனுக்கு எதிரே உள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர்.

ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்துகொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம்குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *