
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, 2024 தேர்தல் அறிக்கையில், பெண்கள் நலனை மேம்படுத்தும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். “திபம்” என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மூன்று இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்படும். இதன் நோக்கம், பெண்களுக்குச் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்காகச் செலவழிக்க வேண்டிய பணத்தை குறைத்து, வீட்டிற்கான பிற செலவுகளில் பயனடையச் செய்வது.
அதிகமாகக் கேஸ் சிலிண்டர்கள் வாங்குவதற்காகக் குடும்பங்கள் மேற்கொள்ளும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, பெண்களுக்குச் சுதந்திரம் அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சந்திரபாபு நாயுடு திட்டத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை நடத்தி, இதன் மூலம் பெண்கள் குடும்பச் செலவுகளை நிதானமாக நடத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான சுமை மாநில அரசுக்கு மிகப் பெரியதாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இதற்காக ரூ.13,423 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சராசரியாக ரூ.2,684 கோடி கூடுதல் செலவாகும்.
இந்தத் திட்டம் ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்குப் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும் என நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

