Yasin Malik:மரண தண்டனை கோரி வழக்கு: விசாரணையில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதி விலகல்!

Advertisements

யாசின் மாலிக்கிற்கு கடந்த 2022ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி:ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். இவர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கடந்த 2019ம் ஆண்டுக் கைது செய்யப்பட்டார். இவருக்குக் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் என்ஐஏ மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மனுவை விசாரிப்பதிலிருந்து நீதிபதி அமித் ஷர்மா இன்று விலகினார். நீதிபதி விலகியதையடுத்து இந்த வழக்கை நீதிபதி பிரதிபா எம்சிங் தலைமையிலான டிவிஷன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது போன்ற வழக்குகளைக் கையாளும் நீதிபதிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு வழக்கு விசாரணைக்கு வரும் என்று நீதிபதி சிங் தெரிவித்தார்.

மேலும் நீதிபதி அமித் உறுப்பினராக இல்லாத மற்றொரு பெஞ்சை ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் பட்டியலிட வேண்டும் என்று அவர் கூறினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு யாசின் மாலிக் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சிறை அதிகாரிகள், அவர் மிகவும் ஆபத்தான கைதி மற்றும் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பராமரிக்க அவரை உடல் ரீதியாகக் கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் இருப்பது கட்டாயம் என்ற அடிப்படையில் அவரது மெய்நிகர் தோற்றத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தனர். அந்தக் கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இந்த மனு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *