
வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள்குறித்து நுாற்றுக்கணக்கான கடிதங்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன.
மருந்துகளின் மீதான ஜி.எஸ்.டி. குறைப்பது ஏழை எளிய மக்களுக்கு நன்மை பயக்கும். ‘மல்டிவிட்டமின்’ போன்ற மருந்துகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பது உண்மையில் சவாலாக இருக்கலாம். இதனை 6 சதவீதமாகக் குறைப்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவியாக இருக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனைப் பரிசீலித்து, மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மருந்துகளுக்கு வரியைக் குறைக்கலாமே!
மருந்துப் பொருட்களுக்கு 12 சதவீத ஜி.எஸ். டி., விதிக்கப்படுவது ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலைக்குச் சவாலாக இருக்கலாம். இது அவர்களின் மருத்துவ செலவுகளை அதிகரிக்கக்கூடும். இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க, அரசு மற்றும் பொருளாதார நிபுணர்கள் இணைந்து செயல்படுவது அவசியம்.
நீங்கள் கூறியது சரி. குறிப்பிட்ட சில மருந்துகள்மீதான வரி நீக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்கத்தக்கது. மருந்துகள் அனைத்துமே இன்றியமையாதவை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. உணவு, உடை, உறைவிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளுடன் மருந்துகளும் சாமானிய மக்களின் அத்தியாவசிய பட்டியலில் அடங்குகின்றன.
மருந்துப் பொருட்கள்மீதான வரி என்பது நோயாளிகள்மீதான வரி என்பதே யதார்த்த நிலை. நடுநிலையுடன் ஆராய்ந்தால், மருந்துகள்மீதான வரி நியாயமற்றது என்பது தெளிவாகும். மருந்துகளின் மீதான வரியை முற்றிலும் நீக்கினால், மக்கள் நல வாழ்வில் அது ஒரு மைல் கல்லாக அமையும் என்பது உண்மை.


