தமிழகத்தில், நாளை முதல் 7 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் தகவல்.!

Advertisements

தமிழகத்தில், நாளை முதல் 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், சென்னை உள்ளிட்ட 6-மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், வரும் 24-ஆம் தேதி உருவாவதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், தீபாவளி திருநாளான நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும். அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் நாளை மறுநாள், 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும். 22-ஆம் தேதி 16-மாவட்டங்களிலும், 23-ஆம் தேதி 6-மாவட்டங்களிலும், 24-ஆம் தேதி 3-மாவட்டங்களிலும், 25-ஆம் தேதி 6 மாவட்டங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *